Wednesday 20 June 2012

திருட்டு நடிகரின் தள்ளாட்டத்தால் மூத்த இயக்குனர்கள் அதிருப்தி.


திருட்டு' படத்தின் மூலம் பிரபலமான மூன்றெழுத்து நாயகன் எப்போது பார்த்தாலும் மயக்கத்திலேயே இருக்கிறாராம். தள்ளாடியபடியே சினிமா நிகழ்ச்சிகளுக்கு வருகிறாராம். 'முளைச்சி மூணு இலை கூட விடல, அதற்குள்ள இப்படியா? என்று சில மூத்த இயக்குனர்கள் அங்கலாய்க்கிறார்களாம். அறிவு படத்தை அடுத்து மூணு படத்தில் நாயகியாக நடித்த நடிகை, முதலில் தெலுங்கில்தான் அறிமுகமானர். அங்கு அவர் நடித்த முதல் இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியதால், ராசியில்லா நடிகை என பெயரெடுத்திருந்தார். தற்போது அங்கு வெளியாகியுள்ள சிங் படத்தின் வெற்றி அவருக்கு பலத்த வரவேற்பை கொடுத்திருக்கிறது. இதனால் தான் தான் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகை என்று அலப்பறையை கொடுத்து வருகிறாராம் இந்த மூணு பட நடிகை.

No comments:

Post a Comment