Friday 29 June 2012

ஒரு நல்ல படமும், கெட்ட படமும்... சினிமா ஏரியாவிலும் நித்தி?


Sathyanandha Movie Stills

         கர்நாடகாவை பொருத்தவரை நித்யானந்தாவின் ஆட்டம் குளோஸ் என்றே நினைக்கிறார்கள் அவரது லீலைகளை தொடர்கதை போல படித்து ரசிக்கும் ரசிகர்கள். இந்த நிலையில் அவரை தாறுமாறாக கிழித்துப் போடும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட சத்யானந்தா என்ற திரைப்படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் அங்கே.

இப்படி ஒரு படம் வெளிவரப்போகிற விஷயம் தெரிந்ததுமே, அப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட்டார் நித்தி. அதிலிருந்து படத்தை மீட்டு வெளியிட்டு விட வேண்டும் என்று நினைத்த தயாரிப்பு தரப்புக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையே நிலவியது. இப்போது அந்த கட்டைகள் தானாக தகர்ந்து கொண்டிருக்கிறதாம்.

இதற்கிடையில், நித்தியை கடவுளின் அவதாரமாகவே காட்ட முன் வந்திருக்கிறார் ஒரு தெலுங்கு இயக்குனர். முழுவதும் நித்திக்கு ஆதரவாக இந்த படத்தை எடுக்க துடிக்கிறாராம் அவர். இதில் ரஞ்சிதாவுக்கும் முக்கிய ரோல் தரப்படவிருக்கிறதாம்.

இந்த புதிய படத்திற்கு ரஞ்சிதாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், விஷயத்தை (ஆ)சாமியிடம் கொண்டு செல்கிற வேலையிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment