நீது சந்திரா வெளிநாடு போனதால் ‘ஆதிபகவன் ஷூட்டிங் பாதித்தது என்றார் இயக்குனர் அமீர். இதுபற்றி அவர் கூறியதாவது: கோவாவில் கடைசியாக நடந்த ஆதிபகவன் ஷூட்டிங்கே இறுதிகட்டமாக நடந்து முடிவதாக இருந்தது. ஆனால் படத்தில் சண்டை காட்சி ஒன்று இடம்பெறுவது கதைக்கு அவசியம் என கருதினேன். இதற்கிடையே ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே கிரேக்க படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அதில் நடிக்க சைப்ரஸ் சென்றுவிட்டார்.
மேலும் ஜெயம் ரவியும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க சென்றார். இதனால் இருவரது கால்ஷீட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ஜெய்சல்மர் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஷூட்டிங் முடிகிறது. ஏற்கனவே பட ரிலீஸுக்கான மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு அமீர் கூறினார்.
No comments:
Post a Comment