தன்னுடைய முதல்படைப்பான 3 படம் அமெரிக்க படவிழாவில் பங்கேற்றதால் உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு இன்னும் ஓர் உற்சாகம் சேர்ந்திருக்கிறது. அது 3 படம் ஜெர்மனி திரைப்பட விழாவிலும் பங்கேற்க இருப்பது தான். ஐஸ்வர்யா தனுஷ், தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்த படம் 3. ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே ஒரு பாட்டுக்காக இப்படத்திற்கு ஏகோபித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியில், படத்தின் ரிசல்ட் சுமார் தான்... என்று ஐஸ்வர்யா மற்றும் தனுஷூக்கு ஒருவித அதிருப்தியை தந்தாலும் மற்றொரு புறம் இப்படம் வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்தது.
சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த திரைப்பட விழாவில் 3 படம் பங்கேற்றது. அதைத்தொடர்ந்து, இப்போது ஜெர்மனியில் நடக்கும் 6வது இந்திய திரைப்பட விழாவிலும் 3 படம் பங்கேற்க உள்ளது. டைரக்டர் விஷன் அவார்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 படம் ஜூலை 18ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதற்காக விரைவில் ஜெர்மனி பறக்க இருக்கிறார் ஐஸ்வர்யா.
இதனிடையே ஜெர்மனி போய் திரும்பி வந்ததும், தனது அடுத்தபடத்திற்கான வேலையையும் உடன் தொடங்க இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் இயக்கும் இந்த 2வது படம் குழந்தைகள் பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த திரைப்பட விழாவில் 3 படம் பங்கேற்றது. அதைத்தொடர்ந்து, இப்போது ஜெர்மனியில் நடக்கும் 6வது இந்திய திரைப்பட விழாவிலும் 3 படம் பங்கேற்க உள்ளது. டைரக்டர் விஷன் அவார்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 படம் ஜூலை 18ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதற்காக விரைவில் ஜெர்மனி பறக்க இருக்கிறார் ஐஸ்வர்யா.
இதனிடையே ஜெர்மனி போய் திரும்பி வந்ததும், தனது அடுத்தபடத்திற்கான வேலையையும் உடன் தொடங்க இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் இயக்கும் இந்த 2வது படம் குழந்தைகள் பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment