பொக்கிஷம் திரைப்படத்துக்குப் பிறகு இயக்கத்திற்கு பதிலாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சேரன். தற்போது வசந்த் இயக்கத்தில் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்து வரும் இவர், மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
படத்துக்கு "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற பெயர் சூட்டியுள்ளார். "180' படத்தில் நடித்த நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இருக்கலாமா இல்லை நடிக்கலாமா என நல விரும்பிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார் சேரன்.
No comments:
Post a Comment