சமீபத்தில் சானாகான் கொடுத்த பேட்டி தான் கோலிவுட் நடிகைகளை கொந்தளிக்க செய்துள்ளது. அப்படியென்ன சொன்னார்...? கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பேட்டியளித்த சானா கான், வட இந்திய நடிகைகளை காட்டிலும், தென்னிந்திய நடிகைகளுக்கு தான் குடி பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் அதிகம். இதை நானே கண்கூடாக பலமுறை, பல நடிகைகள் தள்ளாடி சென்றதை பார்த்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது, விரதம் எல்லாம் என்று இருப்பேன் ஏன்று ஏகத்துக்கும் மீடியாக்கள் முன் வசனம் பேசினார். சானாகானின் இந்தபேச்சு நம்மூர் நடிகைகளை கோபமடைய செய்துள்ளது. பலர் அவருக்கு போன் செய்து லெப் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்களாம். மேலும் அவதூறாக பேட்டி அளித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.ஆனாலும் அவர் மீதான ஆத்திரம் இன்னும் தீரவில்லையாம் நம்ம த்ரிஷாவுக்கு. தனது மேனேஜர் மூலம் நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறாராம். வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கும் சனாகானை சங்கம் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். த்ரிஷாவின் மனுவை ஏற்று சங்கமும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறதாம்
No comments:
Post a Comment