சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கின் உரிமையாளர்களால், சென்னை பெரம்பூரில் முன்பு வீனஸ் திரையரங்கம் இருந்த இடத்தில், புதிதாக ஐந்து திரையரங்குகளை கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும், அவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அந்த தியேட்டர் காம்ப்ளக்ஸை திறந்து வைத்ததும் தெரிந்திருக்கலாம்! இவ்விழாவில் நடிகர் பரத்தும் கலந்து கொண்டார். ஆனால் விழாக்குழுவினர் கடைசிவரை பரத் பெயரை மைக்கில் சொல்லி வரவேற்பு அளிக்காததும், பூங்கொத்து, சால்வை, இத்யாதி, இத்யாதி மரியாதைகள் செய்யாததும் பரத்தை ரொம்பவே மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டதாம்! அதன்விளைவு பாதி பங்ஷனிலேயே வெளியேறிய பரத், காச்மூச், என்று தன் காரியதரிசியை கத்தி தீர்த்தபடியே கிளம்பியது வேடிக்கையாக இருந்தது... என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
விடுங்க பரத்! கமல் கலந்து கொண்ட விழாவுல பரத்தும், கோச்சுக்கிட்டு போயிருக்கக் கூடாது! விழாக்குழுவினரும் கமலை மட்டும் கொண்டாடிட்டி பரத்தை கண்டுக்காமல் விட்டிருக்கக்கூடாது...!
No comments:
Post a Comment