இவரது அலும்புக்கு அளவே இல்லாத நிலையில், இவருக்காக ஒரு கதை எழுதி, அதில் பவர் ஸ்டாருடன் நடித்து படத்தை இயக்கவும் போவதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியிருந்தார் காமெடி ஸ்பெஷலிஸ்டான சந்தானம்! தற்போது சந்தானம் தனது கலையுலக குருவாகக் கருதும் சிம்புவை(சந்தானத்தை மன்மதன் படத்தில் அறிமுகபடுத்தியதால் சந்தானம் சிம்புவை “குரு” என்றே அழைக்கிறார்) பவர் ஸ்டாரிடம் அழைத்துச் சென்று அவரிடம் கோடிக்கணக்கில் ஃபைனான்ஸ் பெற ஏற்பாடு செய்திருப்பதாக நம்பகமான தகவல் கிடைக்கிறது!
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்பு,ஹன்ஷிகா, சந்தானம், விடிவி கணேஷ் நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சீனிவாசனை வரவழைத்து சிம்புவை சந்திக்க வைத்திருகிறார். ஆனால் மீடியாவிடம் சிம்புவை வாழ்த்த வந்தார் என்று நழுவுகிறார்கள். ஆனால் சிம்புவும், சினிவாசனும் ஒரே உடை அணிந்திருப்பது ஏன் என்று தெரியாமல் சட்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் கோலிவுட் நிருபர்கள்! கத்தரிக்காய் முற்றி கடைக்க வராமல் போய்விடும் என்பது இன்னும் சில இளம் கோலிவுட் பட்ஷிகளின் கணக்கு!
No comments:
Post a Comment