Tuesday 26 June 2012

சிம்பு – தனுஷின் ஆச்சரிய ஒற்றுமை (வீடியோ இணைப்பு)




தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (சீமா) – 2012, அண்மையில் டுபாய் நாட்டில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த விக்ரம், சிம்பு, தனுஷ், த்ரிஷா, சமீரா ரெட்டி, ஸ்ரேயா, அமலா போல், குஷ்பு என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ்விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் சிம்பு – தனுஷ் என்றே கூறவேண்டும்.

கடந்த காலங்களாக தமிழ் சினிமா உலகில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு பல்வேறு செய்திப் பரபரப்புக்களுக்கும் அடிபட்டவர்கள் இவ்விருவருமே.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இந்த விருது விழாவில் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.

இந்த விருது விழாவின் போது தென்னிந்திய சினிமாவின் உணர்வுபூர்வமான நாயகன் விருது நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட்டது.

விருதினைப் பெற்றுக்கொண்டு மேடையிலிருந்து வெளியேற முற்பட்ட தனுஷிடம் ‘கொலவெறி’ பாடல் பாடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

உடனே, சரி பாடுகிறேன் என்று கூறிய தனுஷ், தன்னுடன் மற்றுமொருவர் இந்தப் பாடலை இந்த மேடையில் என்னுடன் சேர்ந்து பாடுவார் என்று அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பைக் கேட்டதும், யாரோ ஒருவர்தான் மேடையேறப் போகிறார் என்று திரையுலகத்தினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தருவாயில் மேடையேறியவர் சிம்பு.

தவிர, ‘சிம்பு என்னை விட சிறந்த பாடகர், சிறந்த நடனக் கலைஞர்’ என்றும் சிம்புவைப் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார் தனுஷ். அத்துடன், ‘எல்லோரும் எங்களை எதிரிகள் என்று நினைக்கிறார்கள். ஆமாம், நாங்கள் எதிரிகள் தான். ஆனால் அது வெளியே. உள்ளுக்குள் நாங்கள் நண்பர்கள்’ என்று கூறி இருவரும் ஒருகருக்கொருவர் தோள் மீது கை போட்டுக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் இணைந்து கொலவெறி பாட, அவர்களின் பாடலையும் நட்பையும் கை தட்டி ரசித்துக்கொண்டிருந்தார் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி.

No comments:

Post a Comment