Saturday 30 June 2012

கோச்சடையானில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து வரும் படம் 'கோச்சடையான்'. ஷங்கரின் 'எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் இதுவாகும். 
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா இயக்கிவரும் இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.

இப்படம் கடவுளைப் பற்றிய படம் இல்லை. அரசர் காலத்து படம் போல் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.

ரஜினி (அப்பா), நாசர், ஜாக்கி ஷெராப் என மூன்று மன்னர்கள். அவர்களின் வாரிசுகள்தான் ரஜினி (மகன்), சரத்குமார், ஆதி ஆகியோர். மூத்த ரஜினியோடு ஜாக்கி மோத, மகன் ரஜினியோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி. இதில் மகன் ரஜினிக்கு ஜோடியாகத்தான் தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.

அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர்கள், பேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தால், முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறாராம் ரஜினி.

அநேகமாய் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment