Saturday 30 June 2012

நயன்தாராவிற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயார். மணிரத்னம்



தாடிக்கார இயக்குனரை காதலித்த நயன்தாரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருக்கு காதல் கசந்து போனது. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 
இவருக்காக தற்போது மூத்த இயக்குனர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். விவகாரமாக ஏதும் நினைக்க வேண்டாம். தனது படத்தில் நயன்தாரா நடித்தல் சிறப்பாக இருக்கும் என்று அந்த மூத்த இயக்குனர் கருதுகிறார்.

அவர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனரான மணிரத்னம்தான் அந்த மூத்த இயக்குனர். 'ராவணன்' படத்தை அடுத்து இவர் இயக்கும் படம் 'கடல்'. இப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த மணிரத்னம், நயன்தாராவை தன் படத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை நயன்தாரா நாசூக்காக மறுத்து விட்டாராம். தான் ஏற்கனவே நிறைய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடியாது என்று கைவிரித்துவிட்டாராம்.

ஆனால், இந்த கதாபாத்திரத்துக்கு நயன்தாராதான் சரியாக இருப்பார் என்றும், அவருக்காக காத்திருக்கத் தயார் என்றும் மணிரத்னம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.

No comments:

Post a Comment