பிரபுதேவாவைப் பற்றிய சொந்த வாழ்க்கையை போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு மென்று விட்டது மீடியா!
தனது குழந்தைகளுக்காக பிரபுதேவா, தனது இரண்டாவது காதலி நயந்தாராவிடம் இருந்து விலகி வந்தார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது சினிமா இயக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் இயக்கிய ரவுடி ரத்தோர் படம் வட இந்திய ஃபாக்ஸ் ஆபீஸை கலங்க அடித்துக் கொண்டிருகிறது.
அடுத்து சல்மான் கானை இயக்க தயாராகி விட்ட பிரபுதேவா, அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக மலேசியாவில் முகாமிட்டு இருக்கிறார். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சச்சா என்கிற சந்திரசேகர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனடியாக பிரபல சினிமா எழுத்தாளரும் , உரையாடல் ஆசிரியருமான வி.பிரபாகர் மூலமாக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்துக்கு கொடுத்து உதவி இருக்கிறார்.
No comments:
Post a Comment