Monday 25 June 2012

காமெடி காட்சிகளே இல்லாமல் வெளிவரும் பில்லா 2



   வடிவேலு கால்ஷீட்டை முதல்ல பிளாக் பண்ணுங்க' என்பார் ரஜினி. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும், ரசிகர்களை சட்டென்று கவர்வது சிரிப்புதான்என்பது அவரது நம்பிக்கை. கமல் படத்தில் கிரேஸி மோகன் இருந்தால் போதும். வையாபுரி போன்ற மொக்கை பீஸ்களையும் கூட காமெடியனாக நம்புவது கமலின் தன்னம்பிக்கையா, அல்லது அறியாமையா என்பது அவரது ரசிகர்களின் சில வருட ஆராய்ச்சி.
கமல், ரஜினி வரிசையில் அடுத்ததாக நாம் பார்க்கும் ஹீரோக்களில் அஜீத்திற்கு முக்கியமான இடம் உண்டு. இவரை பொறுத்தவரை காமெடியையோ, காமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை. அதெப்படி அவ்வளவு ஆணித்தரமாக சொல்ல முடிகிறது? அஜீத் நடித்த ஒரு படத்தில் யூகிசேது முழு காமெடியனாக நடித்திருந்ததை வைத்துதான். இவரது சிரிப்பு மூட்டும் அழகை கண்டு பிள்ளையார் கோவில் சுவற்றில் முட்டிக் கொண்டு அழுதார்கள் அஜீத் ரசிகர்கள்.
இந்த தொல்லையெல்லாம் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2 ல் காமெடியே இல்லை. கதை முழு மாஃபியாவை பற்றியது. இதில் எதற்கு தேவையில்லாமல் காமெடியை நுழைக்க வேண்டும் என முடிவெடுத்தாராம் சக்ரிடோலட்டி.
யூகிசேது, ஒய்.ஜி.மகேந்திரன் மாதிரி வேல்டு பேமஸ் நடிகர்களை போட்டு இம்சிப்பதற்கு இது எவ்வளோ மேல்!

No comments:

Post a Comment