ஹரிதாஸ் பட சூட்டிங்கின்போது படகு கவிழ்ந்ததில் நடிகர் கிஷோர், சினேகா உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். ஆடுகளம் கிஷோர், நடிகை சினேகா ஆகியோர் நடிக்கும் புதிய படம் ஹரிதாஸ். டைரக்டர் குமரவேலு இயக்கும் இப்படத்தின் சூட்டிங், ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. தனுஷ்கோடி அருகே கடலில் தீவு போல் உள்ள சிறிய மணல் மேட்டில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதற்காக சினேகா, கிஷோர், இயக்குனர் குமரவேலு, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்டோர் படகில் மணல் தீவுக்கு சென்றனர். கிஷோர், சினேகா பாடல் காட்சியை படமாக்கி விட்டு அனைவரும் படகில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய அலை ஒன்று இவர்கள் வந்த படகை கவிழ்த்துவிட்டது. இதில் கிஷோர் உள்ளிட்டடோர் கடலில் தத்தளித்துள்ளனர். இவர்கள் தத்தளிப்பதை பார்த்த மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து டைரக்டர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோர் மற்றும் ரத்தினவேலு இருவரும் நீச்சல் அடித்தபடி தத்தளித்தனர். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஒரு கட்டையை பிடித்து தாங்கி நின்றேன். அதேசமயம் இப்படத்தில் நடிக்கும் 8 வயது சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம், என்றார்.
No comments:
Post a Comment