சினிமா உலகில் ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குனர்களான பாலுமகேந்திரா, தங்கர் பச்சான் வரிசையில் ரவி. கே சந்திரனும் தற்போது இணைந்துள்ளார்.
மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி.கே சந்திரன் விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராக இருக்கிறது.
'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்க இருக்கிறார்.
ஆஸ்கர் விருது பெற்ற ஒலி இயக்குனரான ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிறநடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment