Saturday 30 June 2012

எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை. ஓவியா


 
களவாணி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “மெரினாவில் வந்தார். சுந்தர் .சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன்மதன் அம்பு” படத்திலும் முக்கிய வேடமேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன்யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
அதுபோல் ஓவியாவும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போவதாக கூறப்பட்டது. இது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:- 

நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை. சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். என் முழுக்கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. திருமணம் நடக்கும்போது நடக்கும். இப்போது அதற்கு அவசரப் படவில்லை. 

இவ்வாறு ஓவியா கூறினார்.

No comments:

Post a Comment