மணிரத்னம் படத்தில் இருந்து விலகியதுபோல் ஷங்கர் படத்தில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார் சமந்தா. மணிரத்னம் இயக்கும் படம் ‘கடல்’. இதில் கார்த்திக் மகன் கவுதம் ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடியாக சமந்தா தேர்வானார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படத்தில் இருந்து சமந்தா விலகினார். தொடர்ச்சியாக கால்ஷீட் தர முடியாததால் விலகியதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் கவுதம் ராமைவிட சமந்தா மூத்த தோற்றத்தில் தெரிவதால் அவரை இயக்குனர் மாற்றியதாக பட குழு தரப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க சமந்தா தேர்வானார். இப்போது அப்படத்தில் இருந்தும் அவர் விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா தற்போது தோல் சிகிச்சை டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனால் வெயில் மற்றும் அதிகபட்ச வெளிச்சம் உள்ள லைட் வரும் 3 மாதத்துக்கு தோல் மீது படக்கூடாது என்று டாக்டர் அறிவுரை வழங்கி உள்ளாராம். ஆனால் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாலும், 30 நாள் கால்ஷீட் ஒட்டுமொத்தமாக தர வேண்டி உள்ளதாலும் தற்போது பெற்றுவரும் தோல் சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறார்.
இதையடுத்தே அவர் ‘ஐ’ படத்தில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ‘ஐ’ படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஷங்கர் சீனா நாட்டுக்கு சென்றிருக்கிறார். எனவே அவரிடம் இதுபற்றி கருத்து கேட்கமுடியவில்லை. ஆனாலும் தனது படத்துக்கு புதிய பாலிவுட் ஹீரோயினை அவர் தேடி வருவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment