ஜீவா, இயக்குனர் சீமானின் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பதாக இருந்த ‘பகலவன்’ படத்தின் கதையை ஜீவா கேட்டுள்ளார்.
படத்துக்கு பொருத்தமான நாயகனாக ஜீவா இருப்பார் என்று தயாரிப்பாளரிடம் சீமான் சொல்லியிருக்கிறார்.படத்தின் நாயகியை தெரிவு செய்ய கொலிவுட்டின் முன்னணி நாயகிகளிடம் பேசி வருகிறார்கள்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பட்டியல் தயாரான பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பட வட்டாரம் கூறுகிறது.
தற்போது ஜீவா, மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி, கௌதம் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்து வருகின்றார்.இப்படங்களை முடித்து விட்டு, பகலவனில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment