Monday 25 June 2012

நான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பேன்! அர்ஜூன்


I am always stable says arjun     தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் அர்ஜூன் தற்போது மணிரத்னத்தின் கடல், வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல், வனயுத்தம், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதுமே பரபரப்பாகத்தான் இருக்கிறேன். இந்த சினிமாவுக்குள் வந்து முப்பது வருஷம் ஆகி விட்டது. வெற்றி, தோல்வி என எல்லாம் சரி சமமாக பார்த்தாகி விட்டது. வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தோல்வியில் துவண்டு விடவும் இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். நான் எப்போதுமே ஒரே மாதிரிதான் இருப்பேன். அதனால்தான் தொடர்ந்து இந்த சினிமாவில் இருக்க முடிகிறது. என்னுடன் வந்தவர்களில் நிறைய பேரை இங்கே பார்க்க முடியவில்லை. சில பேர் இருக்காங்க. அவ்வளவுதான். இப்போது நடிக்கிற படங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது. அர்ஜூனுக்கு ஏற்ற கேரக்டர்கள் இப்போதுதான் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு விஷயம்... முன்பை விட சினிமா ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் சினிமாவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment