Thursday 14 June 2012

15 லடசம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அஜீத் : தயாரிப்பாளர் புகார்!


 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் நல்ல பிள்ளையாக இருந்து வரும் அஜீத் மீது ஆச்சரியப்படத்தக்க ஓர் பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்த திடீர் பிரச்சினையை கிளப்பியுள்ளது செவன்த் சேனல் நாராயணன் என்பதால் திரையுலகமே இன்னும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.காரணம் நாரயணன் மற்றவர்களைப்போல் உண்மையில்லாமல் பிரச்சினை செய்ய மாட்டார் என்பதால்.

1996 ஆம் வருடம் இரு தவணையாக பதினைந்து லட்சம் ரூபாயை நாராயணனிடமிருந்து வாங்கினாராம் அ‌ஜித். என்னை தலாட்ட வருவாளா படத்தில் நடிப்பதாகச் சொல்லியே இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாராம். ஆனால் படத்தில் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக வேறு படத்தில் நடிக்க கால்ஷீட் தருவதாக தெ‌ரிவித்தாராம். வருடங்கள் ஓடிய பிறகும் கால்ஷீட் தரவில்லை.

1996 ல் தந்த பதினை‌ந்து லட்சம் வட்டிப் போட்டு கோடியை தாண்டி நிற்பதாக கணக்கு காட்டுகிறார் நாராயணன். புகார் தயா‌ரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என போயிருக்கிறது. அ‌ஜித் தரப்பு என்ன சொல்கிறது, பார்ப்போம்.

No comments:

Post a Comment