Wednesday 13 June 2012

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலிவுட் நடிகை

 கொலிவுட் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பாலிவுட் படத்தில் ‘ராக் ஆன்’ பட நாயகி ப்ராசி தேசாய் நடிக்க


இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விக்ரம் நடிப்பில் வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தை இந்தியில் கே.எஸ். ரவிகுமார் இயக்குகிறார்.

இது அவர் இயக்கும் முதல் இந்தி படமாகும். இதில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் இருவரும் நடிக்கிறார்கள்.

‘தமிழில் ‘சாமி’ படத்தில் த்ரிஷா நடித்த கதாப்பாத்திரத்தில், ப்டில் ப்ராசி தேசாய் முற்றிலும் மாறுபட்ட நாயகி வேடத்தில் நடிக்கிறார்.

வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதன் முதற் கட்ட படப்பிடிப்பு மும்பை அல்லது ஹைதராபாத்தில் நடக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கொலிவுட்டில் ‘தடையறத் தாக்க ‘ படத்தில் நாயகன் அருண் விஜய் உடன் ப்ராசி தேசாய் நடிப்பதாக இருந்தது. சில பிரச்சினைகளால் ப்ராசி அந்தப் படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment