Thursday 14 June 2012

அஜீத் பற்றி விஜய் !



   விஜய் இயக்கத்தில் அஜீத் நடித்த 'கிரீடம்' படத்திற்கான பேட்டியில் அஜீத்தை பற்றி விஜய் பேசியது...
‘நான் சினிமாவுக்கு வந்தபோது பட்ட கஷ்டங்கள் நிறைய! அது இன்னிக்கு வர்றவங்களுக்கு இருக்கக் கூடாது. இளைஞர்கள் நிறைய பேர் நம்பிக்கையுடன் சினிமாவுக்குள் வரணும்னு நினைக்கிறவன் நான். அதனாலதான் சீனியர் டைரக்டர், புது டைரக்டர்னு வித்தியாசம் எதுவும் பார்க்கிறதில்லை. என்கிட்ட கதை சொல்லும்போது, அவங்க மேல முழு நம்பிக்கை வெச்சு, கிடைச்ச வாய்ப்பை அவங்க சரியா பயன்படுத்திப்பாங்கன்னு ஒவ்வொரு முறையும் சரின்னு சொல்றேன். ஆனா, அப்படி அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் நடிச்ச படங்கள் பெருசா பேசப்படலை. இது கடைசி முயற்சி. இந்தப் படம் மட்டும் சரியா போகலைன்னா இன்னும் அஞ்சு வருஷத்துக்கு எந்தப் புது டைரக்டருக்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டேன்’னு அஜீத் சார் ஒருநாள் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார்.

ஆக, என் தோள்கள்ல இன்னும் பொறுப்புகள் கூடுது. அஜீத் சார் என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்தணும். இனிமேலும் வருகிற புது இயக்குநர்களுக்கு முதல் படத்துல ஹீரோவா அஜீத் கிடைக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். இனியொரு விதி செய்வோம்கிறது அஜீத் சார்கிட்ட எப்பவும் இருக்கிற வெறி. கிரீடம் புதிய ‘தல’விதியை அழுத்தமா எழுதும்."

No comments:

Post a Comment