Thursday 14 June 2012

ஹன்ஷிகாவால் எப்படி இவ்வளவு செலவு பண்ணமுடியும்:சந்தேகத்தில் பிந்தொடரும் அதிகாரிகள்

சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஓர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி இருப்பதாக எல்லோருக்கும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டார் ஹன்ஷிகா. ஆனால் அந்த சந்தோஷத்தை அவரால் தொடர முடியாதபடி ஓர் செய்தி வெளியாகியுள்ளது.


அதாவது இதுவரை ஹன்ஷிகா சம்பாதிப்பது பற்றி யாரும் கவலைப்பட இல்லை. குறிப்பாக வருமான வரித் துறையைச் சார்ந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாக நிக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது.

ஹன்ஷிகா 60 லட்சம் ரூபாய் செலவில் விலையுயர்ந்த பிஎம்டபுள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரில்தான் எல்லா இடத்திற்கும் சென்று வருகிறாராம். படப்பிடிப்புத் தளத்திற்கும் அதில்தான் சென்று வருகிறாராம். அத்தோடு நில்லாமல் போகும் இடமெங்கும் காரைப்பற்றியும் விலையைப் பற்றியும் எல்லோரிடத்திலும் சொல்லிவருகிறாராம்.

இந்த செய்தி அப்படியே காத்துவாக்கில் வருமான வரித்துறை அலுவலக்த்திற்கு சென்றுள்ளது. அவர் எப்படி இவ்வளவு காஸ்ட்லி கார் வாங்கினார் என்று அவர்கள் யோசிக்கிறார்களாம். மேலும் இனி ஹன்சிகா மீது ஒரு கண் வைக்கவும் தீர்மானித்துள்ளனராம்.

கார் வாங்கினோமா, ஜாலியா ஓட்டுனோமான்னு இல்லாம அதன் விலை முதல் கொண்டு தம்பட்டம் அடிச்சா இப்படி தான் நடக்கும். நடிகை அனுஷ்கா மெர்சிடீஸிலும், பூமிகா ஆடியிலும் ஷூட்டிங் வந்தனர். விளைவு அவர்கள் இரண்டு பேர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

No comments:

Post a Comment