Friday 15 June 2012

பிரியாமணிக்கு சவால் விடும் படம்!






பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, அகில இந்தியாவிலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அள்ளிக் கொண்டவர் ப்ரியாமணி!


சென்னனையில் பிறந்து வளர்ந்த இந்த தமிழ்ப்பெண்ணை ஏனோ தமிழ், ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக, தெலுங்கு மலையாளம், கன்னடம் என்று பெரிய வட்டமடித்து கடைசியாக ஆரம்பித்த இடத்துகே வந்திருகிறார். எஸ்! நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் கன்னடத்தில் நேரடியாகத் தயாராகும் ‘சாருலதா’ படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

சவலான பாத்திரம் என்றால் பிரியாமணிக்கு அல்வா சாப்பிடுகிறமாதிரி! ஆனால் சாருலதாவில் கொஞ்ச நஞ்ச சவால் அல்ல! இரட்டைச் சவால்! அதிலும் ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளாக நடிக்க வேண்டும் என்றால் சும்மாவா? டூயல் ரோலில் நடித்து விடலாம். ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளாக நடிக்க திறமை இருந்தால் மட்டுமே முக்கியம்! இதுபற்றி ப்ரியாமணியிடமே கேட்டுவிடலாம் என்று போனப் போட்டால் “ ரொம்ப சந்தோஷமா ஃபீல் பன்றேன் சார். நல்ல கதாபாத்திரங்களுக்காக ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சாருலாதா வாய்ப்பு வந்திருக்கு. இதுலா சாரு, லதா என்கிற இரண்டு ஒட்டிபிறந்த இரட்டைச் சகோதரிகளா நடிக்கிறேன். முதல் இரண்டு ஷெட்யூல் முடிஞ்சுது. ஆனால் முதல் ஷெட்யூல் முழுக்க எந்தப் படத்துக்கு சந்திக்காத கஷ்டத்தை இந்தப் படத்துகான விரும்பி ஏற்றுக் கொண்டேன்.



இந்தமாதிரி ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து ஆச்சர்யப்படும் நாம், அவர்கள் வாழ்க்கை எத்தனை கஷ்டமாக இருக்கும் என்பதை பற்றி நாம் நினைப்பதில்லை. அவர்கள் ஒட்டிப் பிறந்து இருந்தாலும் அவர்கள் வேவ்வேறு சிந்தனை , வெவ்வெறு ரசனையுடன் வளர்கிறார்கள். இது எனக்கு உண்மையிலேயே எனக்கு சவாலான ரோல்!




இந்தப் படத்துக்காக நிஜத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளாக உள்ள எந்த பெண்களையும் நான் சந்திக்க வில்லை.ஆனால் அவர்களைப் பற்றிய புத்தகங்களை நிறைய படித்து அவர்களைப் பற்றி புரிந்து கொண்டேன்” என்கிறார். படத்தின் முதல் பாதியில் சாருலாதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைச்சகோதரிகளாகவும், இரண்டாவது பாதியில் அறுவை சிகிச்சை மூலம் பிரிந்து விடும் சகோதரிகளாகவும் நடித்து அசத்தியிருக்கிறாராம் பிரியாமணி! இந்தப் படம் ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற தகவலும் நம் காதுகளை எட்டுகிறது! இவை எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான தகவல், இந்தப் படத்தில் பிரியாமணிக்கு ஜோடியே கிடையாது! படத்தை அறிமுக இயக்குனர் பொன்.குமரன் இயக்குகிறார்!

No comments:

Post a Comment