தமிழ்சினிமாவின் ‘பிக் பிரதர்ஸ்’ ஆகிவிட்டார்கள் சூர்யாவும் கார்த்தியும். கார்த்தி அஜீத்தை எதிர்க்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை.
பில்லா-2 ம், சகுனியும் ஒரே நாளில் வெளியாகப் போகிறதாம். அஜீத் ரசிகர்களை ஆக்ரோஷம் கொள்ள வைத்திருக்கும் இந்த ரிலீஸ், அடையப் போகும் லாபம் என்ன என்பதை இப்போதே கணித்துவிட முடியாது.
அடுத்து கோடம்பாக்கம் குமைந்து குமைந்து பேசிக் கொண்டிருப்பது இன்னொரு விஷயத்தை பற்றிதான். சூர்யா படமான மாற்றானின் வியாபாரம், விஜய்யின் அஜித்தின் முந்தைய படங்களின் வியாபாரத்தை முந்திவிட்டதாம். அதுவும் பல கோடிகள்…
கே.வி.ஆனந்த் என்ற இயக்குனரின் தனிப்பட்ட அந்தஸ்தும் இந்த வியாபாரத்தில் சம்பந்தப்படுள்ளது என்று கூறுகின்றனர். அந்த நிலைமையில் முருகதாஸ் இந்த வியாபாரத்திலும் செல்வாக்கு செலுத்துவார்.
துப்பாக்கி வியாபாரம் இனி தான் தொடங்கும் என்பது குறிப்பிட தக்கது
No comments:
Post a Comment