Thursday 14 June 2012

ஏன் விலகினார் சமந்தா?


    மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டார் என்ற செய்தி வெளியான போது பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

சமந்தா தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலகி விட்டதாக தனது இணையத்தில் தெரிவித்தார்.

ஆனால். அவர் 'கடல்' படத்தில் இருந்து ஏன் விலகினார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

ஷங்கர் - விக்ரம் இணையும் படத்தில் நடிப்பதற்காக தான் 'கடல்' படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம் சமந்தா. ஷங்கர் தனது படத்தில் நடிக்க 180 நாட்கள் கால்ஷீட் தேதிகள் வேண்டும் என்றும், அதுமட்டுமன்றி தனது படத்தில் நடிக்கும் போது வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு கூறிவிட்டு, தொடர்ந்து 180 நாட்கள் தேதிகள் கொடுத்தால் தற்போது வாங்கி வரும் சம்பளத்தினை விட அதிகம் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். சமந்தா உடனே டபுள் ஒ.கே என்று கூறிவிட்டு 'கடல்' படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

விக்ரம் - ஷங்கர் - சமந்தா இணையும் படம் ஜுலை 15ம் தேதி முதல் துவங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இந்த படத்திற்கு சமந்தா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. 1.25 கோடி தான்!

No comments:

Post a Comment