'பில்லா 2' படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அஜீத் - விஷ்ணுவர்தன் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அஜீத் - ஆர்யா இணையும் இப்படம் இந்தியில் வரவேற்பை பெற்ற படமான 'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் என்ற செய்திகள் வலம் வந்தன.
ஆனால் தற்போது விஷ்ணுவர்தன் - பவன் கல்யாண் இணைந்த 'பஞ்சா' தெலுங்கு படத்தினை தான் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வருகிறாராம்.
தெலுங்கில் 'பஞ்சா' படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆகையால் அப்படத்தின் கதையை அப்படியே வைத்துக் கொண்டு, கதாசிரியர்கள் சுபாவுடன் திரைக்கதை சுவாரசியமாக மாற்றி அமைத்து இருக்கிறாராம் விஷ்ணுவர்த்தன்.
'பஞ்சா' படத்தின் கதை :
'பகவான்' என்னும் தாதாவின் அரவணைப்பில் வாழ்கிறான் ஜெய். தாதாவுக்காக அவரது எதிரிகளிடம் மோதுகிறான். 'பகவான்'னின் மகன் முன்னா அயல்நாட்டிலிருந்து திரும்ப, பிரச்னைகள் துவங்குகிறது. முன்னா ஜானவி என்னும் பெண்ணை விரும்புகிறான். அவளோ ஜெய்யை விரும்புகிறாள்.
முன்னாவை கல்யாணம் செய்து கொள்ள ஜானவி மறுக்க, அவளைக் கொன்று விடுகிறான். ஜெய்யின் மீது ஆத்திரம் கொண்ட முன்னா எதிர்பாராத விதமாக இறந்துவிட, 'பகவான்' ஜெய் தான் அதற்கு காரணம் என ஜெய்யை பழிவாங்கத் துடிக்கிறான்.
பலம் பொருந்திய 'பகவான்' கூட்டத்தை சமாளித்து, ஜெய் தான் காதலிக்கும் சந்தியாவை எப்படி கரம் பிடிக்கிறான் என்பதே கதை.
'பஞ்சா' படத்தில் பவன் கல்யான் கெட்டப் போலவே அஜீத்தும் தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்திற்கான ஸ்டில்களில் இருப்பதால் படம் 'பஞ்சா'வின் ரீமேக் தான் என்கிறார்கள்.
No comments:
Post a Comment