Thursday 14 June 2012

அடுத்த படத்திற்கான வேலைகளை முடக்கிவிட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ்



  3 படத்தின் மூலமாக கிடைத்த பாராட்டுதல்களுக்கும், விருதுகளுக்கும் பின்னர்,தன் அடுத்த கட்ட வேலைகளை முடக்கி விட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ் மிக சிறந்த கதையம்சம் கொண்ட பட மொன்றை இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

தற்போது புதிய படமொன்றிற்கான கதை எழுதுவதில் மிக தீவிரமாக இருக்கும் ஐஸ்வர்யா, கதை முழுவதும் எழுதி முடித்ததும், புதிய படத்திற்கான வேலைகள் இவ்வருட இறுதியில் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா,கதை எழுதுவதாக இருந்தாலும் சரி,படமொன்றை இயக்குவதானாலும் சரி என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி, 100 விழுக்காடுகள் முயற்சி மேற்கொண்டால் என்னுடைய முதல் படமான 3 ஐ விட சிறந்ததான ஒரு படத்தை மீண்டும் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

அண்மையில் நியூ யோக்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 3 படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment