தமிழ் நாட்டில் 50 லட்சம் ரசிகர்களை தன்னகத்தே கொண்டு திரைத்துறையை கலக்கி வருபவர் பவர் ஸ்டார்.
லத்திகா படத்தின் மூலமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
தற்போது இயக்குநர் இமயம் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் தென்னிந்திய நடிகர் பவர் ஸ்டார் கலக்க வருகின்றார்.
நடிகர் சியான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் பவர்ஸ்டார் தனது பலமுகப் பரிணாம நடிப்பை வெளிப்படுத்த உள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் ஜீன் மாதம் தொடங்க உள்ளது. இது பற்றி பவர்ஸ்டார் கூறுகையில்: சங்கர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.
இது போன்ற பெரிய இயக்குநர்களின் திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
வெளிவரவிருக்கம் என்னுடைய அடுத்த திரைப்படமான ஆனந்த தொல்லை என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
லத்திகா படத்தின் மூலமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
தற்போது இயக்குநர் இமயம் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் தென்னிந்திய நடிகர் பவர் ஸ்டார் கலக்க வருகின்றார்.
நடிகர் சியான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் பவர்ஸ்டார் தனது பலமுகப் பரிணாம நடிப்பை வெளிப்படுத்த உள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் ஜீன் மாதம் தொடங்க உள்ளது. இது பற்றி பவர்ஸ்டார் கூறுகையில்: சங்கர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.
இது போன்ற பெரிய இயக்குநர்களின் திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
வெளிவரவிருக்கம் என்னுடைய அடுத்த திரைப்படமான ஆனந்த தொல்லை என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment