Monday 11 June 2012

கௌதம் மேனன் : அப்டேட்ஸ்!

இயக்கம், தயாரிப்பு என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக இருக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுலும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். முதன் முறையாக இப்படத்திற்கு கௌதமுடன் கை கோர்த்து படத்துக்கு இசை கோர்க்கிறார் இளையராஜா.

தனது அடுத்த தயாரிப்பு என்ன, இயக்கம் என்ன என்பது குறித்து இணையத்தில் கெளதம் மேனன் தெரிவித்து இருப்பது :

" 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்க இருக்கிறேன். பிரேம் சாய் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்க இருக்கிறார்கள். 'COURIER BOY KALYAN' என்று தெலுங்கில் இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க இருக்கிறார். அவரது இசையை கேட்டேன் அருமையாக இருக்கிறது. ஜுன் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு படப்பிடிப்பு துவங்குகிறது.

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசை வெளியீடு ஜுலை முதல் வாரத்தில் இருக்கும். ஜுலை 1ம் தேதி கூட இருக்கலாம். படத்தின் இசை கண்டிப்பாக அனைவரையும் கவரும். படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளிவரும். 'மாற்றான்' அலையில் காணாமல் போக விருப்பமில்லை.

தயாரிப்பில் இருக்கும் 'தங்கமீன்கள்' ஒரு மென்மையான படம். விரைவில் அப்படம் வெளிவரும். யுவனின் இசை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். ராம் ஒரு அற்புதமான இயக்குனர்.

எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. 'யோஹன்' - ஆக்ஷன் அதகளம்! "

No comments:

Post a Comment