Sunday 10 June 2012

தமன்னா மிரட்டுவது யாரை? அது ரொம்ப ரகசியமாம்...


சந்தையில வாங்குன கண்ணாடியா இருந்தாலும் சரியாதான் முகம் காட்டும். தமன்னா விஷயத்திலேயும் தப்பு Tamannaஒண்ணும் நடக்கல. அவருக்கு தமிழ் படங்கள் புடிக்கல. அதனால் இந்திக்கு போறாரு, தெலுங்குலயும் கான்சன்டிரேட் பண்ணுறாரு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தெலுங்குக்கு மேனேஜர் வைத்திருக்கும் தமன்னா தமிழுக்கு வைத்திருந்த மேனேஜரை மாற்றிவிட்டார். சொந்த அப்பாவே தமிழிலும் கால்ஷீட் பார்ப்பதால்தான் கோடம்பாக்கம் பக்கமே அவரால் வர முடிய மாட்டேங்குது என்கிறார்கள் பூதக்கண்ணாடி பார்வையோடு.
என்ன சிக்கல்? சம்பளம் பேசும்போதே தனக்காக தனி 'கட்டிங்' கேட்கிறாராம் இந்த பொல்லாத அப்பா. அது தமன்னா சம்பளத்தில் இருபத்தைந்து சதவீதம் என்பதுதான் 'வெவ்வவ்வே' சமாச்சாரம்.
இதற்கிடையில் இன்னொரு முக்கியமான தகவல். ஆந்திராவிலும் மும்பையிலும் சுற்றிக் கொண்டிருக்கும் தமன்னா, அவ்வப்போது சென்னை நிலவரத்தையும் போனில் விசாரித்துக் கொண்டிருக்கிறாராம். அவருக்கு பிடிக்காத சில விஷயங்கள் இங்கு நடக்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் அடித்து, எல்லாத்தையும் கவனிச்சுட்டுதான் இருக்கேன் என்று மிரட்டவும் செய்கிறாராம்.
தமன்னா மிரட்டுவது யாரை? எதற்காக? 'அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டோம்ல' என்று கண் சிமிட்டுகிறது கோடம்பாக்கத்தின் குழப்பவாதிகள் வட்டாரம்...

No comments:

Post a Comment