Wednesday 13 June 2012

விஜயை அஜித்தை வைத்து படம் எடுக்கும் போது காதல் கதைகள் என்று பயந்தேன் – இயக்குனர் எழில்


விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜீத் நடித்த பூவெல்லாம் உன்வாசம், ஜெயம் ரவியின் தீபாவளி படங்களை டைரக்டு செய்தவர் எழில். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்தி பறவை என்ற காமெடி படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.

எழில் அளித்த பேட்டி வருமாறு:-

மனம் கொத்தி பறவை காமெடி, காதல் கலந்த படமாக வந்துள்ளது. இப்படத்துக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். வசூல் ரீதியில் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காமெடி படங்களைத் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். தியேட்டர்களில் உட்கார்ந்து படம் பார்க்க இந்த காலத்து இளைஞர்களுக்கு பொறுமை இல்லை.

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன்வாசம் போன்ற காதல் படங்களை எடுக்க இப்போது பயமாக இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் காமெடி கதைகளையே படமாக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்து காமெடி படமொன்றை இயக்குகிறேன்.

இவ்வாறு எழில் கூறினார்.

No comments:

Post a Comment