Friday 15 June 2012

“சுருட்டு ” புகைக்க ஆசைப்பட்ட நமிதா!! புதிய பரபரப்புத் தகவல்.

நம்ம நமீதாவுக்கு விநோத ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒரு முறை நமீதா மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம்.


ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு, அந்த பாட்டியிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க, அவரோ, “இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழுக்கிறியா?” என்று கேட்டாராம்.

“சுருட்டுன்னா என்னா’ உதவியாளரைக் கேட்டிருக்கிறார் நமீதா. அவர் ‘சிகார்’ என்று கூறியதும், அப்போதைக்கு வேண்டாம் என்று கூறி வந்துவிட்டாராம்.

ஆனால் அங்கிருந்து வந்த பிறகு, அந்த சுருட்டை ஒரு முறை பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது நமீதாவுக்கு…! நல்ல ஆசை…!

No comments:

Post a Comment