Sunday 10 June 2012

சரியான நேரத்தில் மீண்டும் நடிக்க வருவார் ஜோ: சூர்யா

 ஜோதிகா சரியான நேரத்தில் மீண்டும் நடிப்பைத் தொடர்வார் என்று அவரது கணவரும், நடிகருமான சூர்யா தெரிவித்துள்ளார்.நடிகை ஜோதிகா குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான சீதா கல்யாணம் தான் அவர் கடைசியாக நடித்த படம். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு மீண்டும் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாக அவரது கணவர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து சூர்யா கூறுகையில், மீண்டும் படங்களில் நடிக்க ஜோதிகா ஆசைப்படுகிறார். நான் அவரை நடிக்க வேண்டாம் என்று ஒருபோதும் கூறியதில்லை. விளம்பரங்களில் நடித்தால் ஓரிரு நாள் தான் ஷூட்டிங் நடக்கும். ஆனால் படங்களில் நடித்தால் அவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் முடியாது. அதனால் அவர் குழந்தைகளைப் பிரிந்திருக்க வேண்டி வரும். குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நடிக்காமல் உள்ளார். இது தான் நடிப்பைத் தொடர சரியான நேரம் என்று அவருக்கு தோன்றும்போது மீண்டும் நடிக்க வருவார் என்றார்.சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment